மன சிகிச்சை – 2

ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 7. இதுவும் ஒரு சுய பிரகடனம். இந்த சுய பிரகடனத்தை உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உங்கள் மனதுக்குள் கூறிக் கொள்ளுங்கள். உங்கள் செவிகளுக்கு விளங்குமாறு சத்தமாக வாசிப்பது நல்ல பயனைத் தரும்.

தியான நிலையில் அமர்ந்து கொண்டு, சுவாசத்தின் மூலமாக பிராண சக்தியையும், உச்சந்தலையின் மூலமாக பிரபஞ்ச சக்தியையும் கிரகித்து, உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அனுப்பி அந்த உறுப்புகளை பலப்படுத்துவதையும் அவற்றின் இயக்கத்தை சீர் செய்வதையும் கவனிக்கவும்.

ஒவ்வொரு வரியையும் தற்போது உங்களுக்கு நடந்துக் கொண்டிருப்பதைப் போன்று உணர்ந்து உச்சரிக்க வேண்டும். சுய பிரகடனம் சொல்லும் போது, முழு உணர்வுடன் உங்கள் உடல், மனம், ஆற்றல் மற்றும் உயிர் நிலையில் மாற்றங்கள் உண்டாவதை உணர வேண்டும்.

காலை மாலை என தினம் இரண்டு வேலைகள் அமைதியாக அமர்ந்துக் கொண்டு இந்த பிரகடனத்தை வாசிக்கவும்.

★ எனக்குள்ளும் வெளியிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச பேராற்றலை நான் தெளிவாக உணர்கிறேன்.

★ இந்த பிரபஞ்சத்தின் பேராற்றல் மென்மையாக எனக்குள் பரவத் தொடங்குகிறது.

★ இந்த பிரபஞ்சத்தின் படைப்பாற்றல் எனக்குள் புகுந்து, எனக்குள் நிறைகிறது.

★ எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றலை என் உடல் கிரகித்து தனக்குள் சேர்த்து வைக்கத் தொடங்குகிறது.

★ என் உடலின் உள் உறுப்புகள் அனைத்திலும் சேர்ந்திருக்கும் கழிவுகள் வெளியேறத் தொடங்குகின்றன.

★ என் உடலின் வெளி உறுப்புகள் அனைத்திலும் சேர்ந்திருக்கும் கழிவுகள் வெளியேறத் தொடங்குகின்றன.

★ என் உடலின் உள் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமும் பலமும் பெறுகின்றன.

★ என் உடலின் வெளி உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமும் பலமும் பெறுகின்றன.

★ என் உடலின் உள் உறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகள் அனைத்தும் சீரடைந்து, மனம், ஆற்றல் மற்றும் உயிருடன் இணைந்து இயங்குகின்றன.

★ என் மனம் மற்றும் உடலின் ஆற்றல் சீர் அடைகின்றன.

★ என் மனம் மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்கின்றன.

★ நான் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. எனக்கு உதவிய, வழிகாட்டிய, பிரபஞ்ச பேராற்றலுக்கும், தெய்வங்களுக்கும், என் முன்னோர்களுக்கும், புனித ஆன்மாக்களுக்கும், அனைவருக்கும் அனைத்துக்கும் நன்றி, நன்றி, நன்றி.

உடலும் மனமும் தன்னை சீர் செய்து கொள்ள வாய்ப்பளித்து. சுவாசத்தையும் உச்சந்தலையையும் கவனித்தவாறு ஐந்து நிமிடங்கள் அமைதியாக தியான நிலையில் அமர்ந்திருக்கவும். அல்லது அமைதியாக சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X