
மன சிகிச்சை – 1
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை -6. இது ஒரு சுய பிரகடனம். இந்த சுய பிரகடனத்தை உறுதியாகவும் நம்பிக்கையுடனும் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். உங்கள் செவிகளுக்கு விளங்குமாறு சத்தமாக வாசிப்பது நல்ல பயனைத் தரும்.
தியான நிலையில் அமர்ந்து கொண்டு, சுவாசத்தின் மூலமாக பிராண சக்தியையும், உச்சந்தலையின் மூலமாக பிரபஞ்ச சக்தியையும் கிரகித்து, உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அனுப்பி, அந்த உறுப்புகளை பலப்படுத்துவதையும் அவற்றின் இயக்கத்தை சீர் செய்வதையும் கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு வரியையும் தற்போது உங்களுக்கு நடந்துக் கொண்டிருப்பதைப் போன்று உணர்ந்து உச்சரிக்க வேண்டும். சுய பிரகடனம் சொல்லும் போது, முழு உணர்வுடன் உங்கள் உடல், மனம், ஆற்றல் மற்றும் உயிர் நிலையில் மாற்றங்கள் உண்டாவதை உணர வேண்டும்.
ஒவ்வொரு வரியையும் பொறுமையாக நிதானமாக மூன்று முறைகள் உச்சரிக்கவும்.
★ நான் எடுக்கும் ஒவ்வொரு சுவாசமும் என் உடலையும் மனதையும் தளர்வாகவும் அமைதியாகவும் உணர்வுடனும் இருக்கச் செய்கிறது.
★ நான் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்திலும் என் உடலும் மனமும் சீரடைகின்றன.
★ நான் அமைதி நிறைந்து இருக்கிறேன்.
★ நான் விழிப்புணர்வுடன் இருக்கிறேன்.
★ என் மனம் அமைதியாக இருக்கிறது.
★ என் மனம் நிம்மதியாக இருக்கிறது.
★ என் உடல் அமைதியாக இருக்கிறது.
★ என் உடல் ஓய்வு நிலையில் இருக்கிறது.
★ நான் எடுக்கும் ஒவ்வொரு சுவாசமும் என் உடலையும் மனதையும் தளர்வாகவும் அமைதியாகவும் உணர்வுடனும் இருக்கச் செய்கிறது.
★ நான் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்திலும் என் உடலும் மனமும் சீரடைகின்றன.
★ என் உடலின் உள் உறுப்புகள் அனைத்தும் தளர்வு நிலையில் அமைதியாக இருக்கின்றன.
★ என் உடலின் வெளி உறுப்புகள் அனைத்தும் தளர்வு நிலையில் அமைதியாக இருக்கின்றன.
★ தலை முதல் கால் பாதம் வரையில் என் உடலின் உறுப்புகள் அனைத்தும் தளர்வு நிலையில் அமைதியாக இருக்கின்றன.
★ நான் எடுக்கும் ஒவ்வொரு சுவாசமும் என் உடலையும் மனதையும் தளர்வாகவும் அமைதியாகவும் உணர்வுடனும் இருக்கச் செய்கிறது.
★ நான் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்திலும் என் உடலும் மனமும் சீரடைகின்றன.
★ என் ஆரோக்கியமும் ஆற்றலும் அதிகரிக்கின்றன.
★ நான் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.
★ நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. எனக்கு உதவிய, வழிகாட்டிய, பிரபஞ்ச பேராற்றலுக்கும், தெய்வங்களுக்கும், என் முன்னோர்களுக்கும், புனித ஆன்மாக்களுக்கும், அனைவருக்கும் அனைத்துக்கும் நன்றி, நன்றி, நன்றி.
உடலும் மனமும் தன்னை சீர் செய்து கொள்ள வாய்ப்பளித்து. சுவாசத்தையும் உச்சந்தலையையும் கவனித்தவாறு ஐந்து நிமிடங்கள் அமைதியாக தியான நிலையில் அமர்ந்திருக்கவும். அல்லது அமைதியாக சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கவும்.